நவ. 22இல் குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (நவ. 22)  நடைபெறுகிறது. 

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (நவ. 22)  நடைபெறுகிறது. 
இதுகுறித்து மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  நவம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்,  22ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு  மாவட்ட ஆட்சியரக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில்  நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கட ந்த மாத கோரிக்கை தினத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் அளிக்கப்படும். மேலும், விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளும் மாவட்ட ஆட்சியரால் நேரில் பெறப்படும். கோரிக்கை மனுக்கள் பதிவு செய்து ஒப்புகை பெறும் வசதி மாவட்ட ஆட்சியர்அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும்.  
கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு மாவட்ட   ஆட்சியரிடம்  நேரடியாக   தங்கள்  கோரிக்கைகளை தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com