குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் இ.ஜி. ரவிசங்கர் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் குமரி மேற்கு மாவட்டத் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலர் எஸ். விஜயதரணி எம்.எல்.ஏ., மனித உரிமை துறை மாநிலத் தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் ஆகியோர் பேசினர். தமிழக மகிளா காங்கிரஸ் துணைத் தலைவர் லைலா ரவிசங்கர், ஐஎன்டியூசி மாவட்டத் தலைவர் அனந்தகிருஷ்ணன், கட்சி நிர்வாகிகள் ஜோர்தான், கே.ஜி. ரமேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.