டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் சிறப்பிடம்: குமரி மாவட்ட வீரர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற குமரி மாவட்ட வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே


தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற குமரி மாவட்ட வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே பாராட்டு தெரிவித்தார்.
14 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான தேசிய அளவிலான 3ஆவது டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி இந்திய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெற்றது. இதில் தமிழக அணி இரண்டாமிடம் பெற்றது. இந்த அணியில் இடம்பெற்றிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த். மு.வடநேரே, மாவட்ட வன அலுவலர் ஆனந்த் ஆகியோர் பாராட்டினர். மேலும், கன்னியாகுமரி மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கத் தலைவர் நாஞ்சில் நாகராஜன், செயலாளர் விமல் ஆனந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com