தேசிய அளவிலான தடகளப் போட்டிக்கு வாவறை பள்ளி மாணவர் தேர்வு பெற்றுள்ளார்.
அண்மையில் நெய்வேலியில் 61 ஆவது மாநில அளவிலான குடியரசு தின விழா தடகளப் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் நித்திரவிளை அருகேயுள்ள வாவறை புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர் அபிஷ் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார்.
இதையடுத்து, இம் மாணவர் அடுத்த மாதம் தில்லியில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான குடியரசு தின விழா தடகளப் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் அபிஷை, குழித்துறை மறைமாவட்ட கத்தோலிக்கப் பள்ளிகளின் கூட்டாண்மை மேலாளர் காட்வின் செல்வ ஜஸ்டஸ், பள்ளித் தாளாளர் மரிய ராஜேந்திரன், தலைமையாசிரியர் ராபர்ட் பெல்லார்மின் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.