மார்த்தாண்டம் மேம்பாலம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை

மார்த்தாண்டம் மேம்பாலப் பணிகள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் சுப. உதயகுமாரன்.

மார்த்தாண்டம் மேம்பாலப் பணிகள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் சுப. உதயகுமாரன்.
இதுகுறித்து நாகர்கோவிலில் அவர் திங்கள்கிழமை  கூறியது: குமரி மாவட்டம்,  மார்த்தாண்டத்தில் மத்திய அரசு நிதியில் ரூ. 220  கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலத்தில் ஏற்பட்ட அதிர்வு குறித்தும்,  அதன் உறுதித்தன்மை குறித்தும் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.  இதுகுறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.  கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் மீண்டும் புதிய வீரியத்துடன் நடைபெறும்.
குமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.  இதற்கு தமிழக அரசுதான் காரணம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com