திருவட்டாறு அருகே கால்வாயில் மிதந்து வந்த இளம்பெண் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குலசேகரத்திலிருந்து சுவாமியார்மடம் வழி செல்லும் சிற்றாறு பட்டணங்கால்வாயில் செவ்வாய்க்கிழமை காலையில்
பெண் சடலம் மிதந்து வந்ததாம். இது குறித்து பொதுமக்கள் திருவட்டாறு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் வேர்க்கிளம்பி அருகே புல்லுவிளை பகுதியில் வைத்து பெண்ணின் சடலத்தை மீட்டு ஆசரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 25 வயது மதிக்கத்தக்க அப்பெண் சுடிதார் அணிந்த நிலையில் காணப்பட்டார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.