திருவட்டாறு கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவுக்கு தமிழக ஆளுநரை அழைக்க முடிவு

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில்  வைகுண்ட ஏகாதசி  பெருவிழாவுக்கு,  தமிழக ஆளுநரைஅழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில்  வைகுண்ட ஏகாதசி  பெருவிழாவுக்கு,  தமிழக ஆளுநரைஅழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் டிச. 18 ஆம் தேதி  நடைபெறவுள்ள  வைகுண்ட ஏகாதசி பெருவிழாவுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
இக் கூட்டத்துக்கு, ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.  ஆதிகேசவா சேவா டிரஸ்ட் தலைவர் தங்கப்பன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஆர்.எஸ்.எஸ். மாவட்ட அமைப்பாளர்  கலையரசன் தலைமையில் திருவிழா குழு அமைக்கப்பட்டது. மேலும் இக்குழுவுடன் சேர்ந்து செயல்படும் வகையில் பல்வேறு துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டன. 
இந்நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநரை அழைக்கவும்,  வைகுண்ட ஏகாதசிக்கு  உள்ளூர் விடுமுறை வழங்க தமிழக அரசை கேட்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com