கல்குறிச்சி புனித ஜோசப் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ராதிகா தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் கனகராஜ் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். தாளாளர் அருள்தந்தை ஜாண்சாமுவேல், மாணவர்களின் அறிவியல் படைப்புகளைப் பார்வையிட்டு பாராட்டினார். புனித ஜோசப் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டனர். சிறந்த படைப்புகளை உருவாக்கிய வி.ஆர். வர்ஷா, ஆனி பிளசன்டினா, ஜாண்சலின், ஆன்றோ பிளசென்ட் ஆகிய மாணவிகளுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரெக்சலின், செலஸ்டின், லுசினா, பிலோமினா, விஜயா, ரெஜின்மேரி, ஷெர்லின், ஷாலியோவா ஆகியோர் செய்திருந்தனர்.