ஐஸ் ஆலைக்கு தடை கோரி முன்சிறையில் பாஜக ஆர்ப்பாட்டம்

புதுக்கடை அருகேயுள்ள சக்திநகரில் அனுமதியின்றி ஐஸ் தொழிற்சாலை செயல்படுவதாகவும், அதை தடைசெய்ய

புதுக்கடை அருகேயுள்ள சக்திநகரில் அனுமதியின்றி ஐஸ் தொழிற்சாலை செயல்படுவதாகவும், அதை தடைசெய்ய வலியுறுத்தியும் பா.ஜ.க.வினர் முன்சிறை ஒன்றிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்சிறை ஒன்றியம், பைங்குளம் ஊராட்சி சக்திநகரில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். இங்குள்ள மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அரசு அனுமதியின்றி தனியார் ஐஸ் தொழிற்சாலை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டதாம். 
இந்த ஆலையால்  நீராதாரம் பாதிக்கப்படும் எனவும், சுகாதார சீர்கேடு ஏற்படும் என்றும் தொடக்கத்திலேயே மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ஐஸ் தொழிற்சாலையை தடைசெய்ய வலியுறுத்தி, முன்சிறை ஒன்றிய பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு,  ஒன்றிய பா.ஜ.க. தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். பைங்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் சந்திரகுமார் முன்னிலை வகித்தார்.
பா.ஜ.க. மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன், ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார். இதில், புதுக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் மோகனகுமார், பைங்குளம் தொடக்க கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜகுமார், சௌந்தரராஜன், தங்கம் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com