குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை உள்பட அணைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை திடீரென மிதமான சாரல் மழை பெய்தது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், குமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.
மேல் கோதையாறு, கீழ்கோதையாறு, பேச்சிப்பாறை, சிற்றாறு உள்ளிட்ட அணைப் பகுதிகள் மற்றும் குலசேகரம், அருமனை, திற்பரப்பு அருவி உள்ளிட்ட மலையோரப் பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. அதே வேளையில் பெருஞ்சாணி பகுதியில் லேசான தூறலுடன் மழை தணிந்து விட்டது.
மழையின் காரணமாக கரையோரப் பகுதிகளில் வாடிக்கிடந்த வாழைகள், மரவள்ளி, தென்னை உள்ளிட்ட பயிர்கள் புத்தெழுச்சி பெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.