மாநில அரசு மீது ஊழல் புகார் தெரிவித்து குமரியில் 2 இடங்களில் திமுக ஆர்ப்பாட்டம்

அதிமுக ஆட்சியில், தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் ஊழல்கள் மலிந்துவிட்டதாக கண்டனம் தெரிவித்து

அதிமுக ஆட்சியில், தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் ஊழல்கள் மலிந்துவிட்டதாக கண்டனம் தெரிவித்து, குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் தக்கலையில் திமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். 
ஆர்ப்பாட்டத்தில், ஆஸ்டின் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு, நகரச் செயலர் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தக்கலையில் வட்டாட்சியர்  அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, குமரி மேற்கு மாவட்டச் செயலர் மனோ தங்கராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து, தற்போதைய ஆட்சியின் ஊழல்பெருகிவிட்டதாக பட்டியலிட்டார். நகரச் செயலர் மணி  முன்னிலை  வகித்தார். முன்னாள் அமைச்சர் கு. லாரன்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெஜினால்டு, புஷ்பலீலா ஆல்பன், மாவட்ட துணைத் தலைவர் ஜாண்கிறிஸ்டோபர், ஒன்றியச் செயலர்கள்  அருளானந்த ஜார்ஜ்,  சிதறால் ரவிசந்திரன்,  ஜாண்பிரைட், ராஜன்,  மனோன்மணி,  குழித்துறை நகரச் செயலர் ஆசை தம்பி,  வர்த்தக அணிச் செயலர் ரேவன்கில், பொறியாளர் அணி வர்க்கீஸ்,  கோதநல்லூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் கிறிஸ்டல் பிரேமகுமாரி, கிள்ளியூர் ஒன்றியச் செயலர் ராஜன்,  நிர்வாகிகள் வழக்குரைஞர் முத்துகுமரேஷ், ஆல்பர்ட்,  குமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றறனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com