குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

நாகர்கோவிலில் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவிலில் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சுசீந்திரம் தேரூர் புதுக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஆன்றனி (43). இவர் மீது கஞ்சா வழக்கு உள்பட 18-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 
இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருவதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே,  ஆன்றனியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com