சிறுமி பலாத்காரம்: தந்தை தலைமறைவு

குளச்சல் அருகே 14 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து போலீஸார் தேடி வருகின்றனர்.

குளச்சல் அருகே 14 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து போலீஸார் தேடி வருகின்றனர்.
குளச்சல் அருகே உள்ள அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, கடந்த சில நாள்களாக திடீர் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவியின் தாயார், அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் மற்றும் உறவினர்கள் விசாரித்தபோது, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது, தந்தை தன்னை பலாத்காரம் செய்ததாகவும், வெளியில் சொன்னால் தன்னையும், தாயாரையும் கொன்று விடுவதாக மிரட்டியதாகலும் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் தாயார், குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இந்திய தண்டனை சட்டம் 506(1),  போக்சோ சட்டம், 5 , 6 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தந்தையை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com