நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் தேர்தல் கல்விக் குழுமம் அமைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் சிவதாணு பிள்ளை தலைமை வகித்தார். கல்லூரி பேராசிரியரும், தேர்தல் பொறுப்பாளருமான மதுசூதனன் முன்னிலை வகித்தார். தேர்தல் வட்டாட்சியர் சுப்பிரமணியன் பேசினார். கூட்டத்தில், கல்லூரி பேராசிரியர்கள் 8 பேர் கல்விக் குழும பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும் மாணவர்கள் குழும பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன், கணினி இயக்குநர் செந்தில்குமார், பொன்ராஜ் மற்றும் 600 -க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.