குலசேகரம் இரட்டைக்குளத்தை சுத்தப்படுத்தக் கோரிக்கை

குலசேகரம் பேரூராட்சியிலுள்ள இரட்டைக்குளத்தை சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குலசேகரம் பேரூராட்சியிலுள்ள இரட்டைக்குளத்தை சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குலசேகரம் பேரூராட்சிக்குள்பட்ட காவல்ஸ்தலம் பகுதியில் இரட்டைக்குளம் உள்ளது. இக்குளத்தின் பாசனப் பகுதிகள் தற்போது பெருமளவில் வீட்டு மனைகளாகவும், ரப்பர் தோட்டங்களாகவும் மாறியுள்ளன. எனினும் இக்குளத்தால் இப்பகுதி கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இக்குளத்தின் இருபுறமும் கழிவு நீர் ஓடைகள் இணைவதால் குளத்து நீர் அசுத்தமாகி வருகிறது. எனினும் இக்குளத்தில் பொதுமக்கள் குளித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இக்குளத்தில் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துக் காணப்படுவதால் குளத்தை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த குளத்தில் வளர்ந்துவரும் ஆகாயத்தாமரை உள்ளிட்ட நீர்த் தாவரங்களை அகற்றி குளத்தை சுத்தப்படுத்த பொதுப்பணித்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் முன்வர வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com