திருவிதாங்கோட்டில் கல்லூரி மாணவர்கள் தூய்மைப் பணி

திருவிதாங்கோடு முஸ்லிம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி  மாணவர்கள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்

திருவிதாங்கோடு முஸ்லிம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி  மாணவர்கள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்  தக்கலை பேருந்து நிலையம்,  பத்மநாபபுரம் கோட்டை ,  அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்  ஆகிய  பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சிக்கு,  கல்லூரி தாளாளர் எச். முகம்மது அலி தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் எஸ். டாண் தர்மராய் முன்னிலை வகித்தார். பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.  இதில்,  நகராட்சி பொறியாளர்  சீனிவாசகராகவ்,  சுகாதார ஆய்வாளர்  முத்துராமலிங்கம்,  சுகாதார  மேற்பார்வையாளர் மோகன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர். 
ஏற்பாடுகளை  பேராசிரியர் லெப்டினென்ட் ஜெகதீஸ் தலைமையில்  பேராசிரியர் அப்துல் அஸீம்  மற்றும் தேசிய மாணவர்  படையினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com