நகை, பணம் திருட்டு

ஈத்தாமொழி அருகே தொழிலாளியின் வீட்டு பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

ஈத்தாமொழி அருகே தொழிலாளியின் வீட்டு பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
வடக்கு சூரங்குடி பகுதியைச் சேர்ந்தவர் தங்கநாடார் (49). தொழிலாளியான இவர், புதன்கிழமை காலையில் வீட்டை பூட்டிவிட்டு, மனைவியுடன் மரவேலைக்கு சென்றிருந்தாராம். பின்னர் இரவில் அவர்கள் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததாம். உள்ளே சென்று பார்த்தபோது, 1.5 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலி, அரை பவுன் மோதிரம், ரூ. 40 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com