பேச்சிப்பாறை வாக்குச் சாவடியில் தங்களது வாக்கை பதிவு செய்வதற்காக, பழங்குடி மக்கள் படகில் திரளாக வந்து வாக்களித்தனர்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வாக்காளர்களில் குறிப்பிட்ட அளவினர் மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளில் வசிக்கின்றனர். குறிப்பாக பேச்சிப்பாறை அணையின் மறுபக்கத்தில் உள்ள காடுகளில் உள்ள பழங்குடி குடியிருப்புகளான தோட்டமலை, தச்சமலை, வளையங்தூக்கி, பின்னை மூட்டுத் தேரி, நடனம் பொற்றை, மாங்காமலை உள்ளிட்ட பல்வேறு பழங்குடி கிராம மக்கள், பேச்சிப்பாறை அணையில் இயக்கப்படும் தனியார் படகுகளில் வந்து பேச்சிப்பாறை அரசு உண்டுறை மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.