சுசீந்திரம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
சுசீந்திரம் கற்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டியா பிள்ளை (48). தொழிலாளி. இவர் திடீரென உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம். எனினும், நோய் குணமாகவில்லையாம். இதனால், சில தினங்களாக மன வேதனையில் இருந்தாராம். இந்நிலையில், அவர் விஷம் குடித்துவிட்டு வீட்டின் அருகே திங்கள்கிழமை மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இது குறித்து சுசீந்திரம் காவல் ஆய்வாளர் சங்கரராவ், சிறப்பு உதவி ஆய்வாளர் பிரசாத் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.