தாணுலிங்க நாடார் பிறந்த நாள்: நாகர்கோவிலில் இந்து முன்னணி இருசக்கர வாகனப் பேரணி

இந்து முன்னணியின் நிறுவனர்- தலைவர் தாணுலிங்கநாடாரின் 104ஆவது பிறந்த நாள் விழா நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. 

இந்து முன்னணியின் நிறுவனர்- தலைவர் தாணுலிங்கநாடாரின் 104ஆவது பிறந்த நாள் விழா நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. 
இதை முன்னிட்டு நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலிலிருந்து இருசக்கர வாகனப் பேரணி தொடங்கியது. பேரணிக்கு மாவட்டப் பொதுச் செயலர் கண்ணன் தலைமை வகித்தார். திருநெல்வேலி கோட்டச் செயலர் சக்திவேலன் பேரணியை தொடங்கிவைத்தார். இதில், கோட்டச் செயலர் தங்க மனோகர், பாஜக நிர்வாகிகள் மீனாதேவ், தேவ், முத்துராமன், ராஜன், இந்து முன்னணி பெரியசாமி, சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இப்பேரணி கோட்டாறு, இடலாக்குடி, சுசீந்திரம், ஈத்தங்காடு, வழியாக பொற்றையடியில் உள்ள தாணுலிங்க நாடாரின் சமாதியை அடைந்தது. அங்கு  மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 
பின்னர் நடைபெற்ற கருத்தரங்குக்கு இந்து முன்னணி மாவட்டத் தலைவர் மிசாசோமன் தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் அசோகன் அறிமுகவுரையாற்றினார். வெள்ளிமலை ஹிந்து தர்மவித்யா பீடம் சுவாமி சைதன்யானந்த மகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் செல்லன், மாநிலப் பொதுச் செயலர் அரசு ராஜா, சிவச்சந்திரன், இந்து முன்னணி நிர்வாகிகள்   சிவதாணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com