கன்னியாகுமரி

காங்கிரஸ் சேவாதள நிர்வாகிகள் கூட்டம்

DIN

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சேவாதள பொதுக்குழு கூட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட சேவாதள தலைவர் ஜோசப் தயாசிங் தலைமை வகித்தார். பொதுச் செயலர் ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஃஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 
20 ஆண்டுகள் மக்களுக்காக பணியாற்றிய சேவாதள பிரிவினருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட இடஒதுக்கீடு முறையில் வாய்ப்புகள் வழங்க வேண்டும். சேவாதள உறுப்பினர்கள் வீடுகள்தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து சக்தி செயலி திட்டத்தில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சேவாதள மாவட்ட துணைத் தலைவர் ஜிஜோ, வட்டாரத் தலைவர்கள் ஜெயசேகர், ஜெபா, கிறிஸ்டென்சென், செயலர்கள் ராஜசேகர், ராசிக், சற்குணதாஸ், வட்டார துணைத் தலைவர் அனீஷ், நிர்வாகிகள் ஜோசப், ரதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT