குழித்துறையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம்

நாகர்கோவில் பிஎஸ்என்எல் சார்பில் குழித்துறையில் மக்கள் நீதிமன்ற முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.22) நடைபெறுகிறது.

நாகர்கோவில் பிஎஸ்என்எல் சார்பில் குழித்துறையில் மக்கள் நீதிமன்ற முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.22) நடைபெறுகிறது.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல். நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் அலெக்சாண்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தரைவழி இணைப்பு பெற்று கட்டண பாக்கி காரணமாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள தக்கலை, ஆளூர், மணக்காவிளை, திருவிதாங்கோடு , வில்லுக்குறி , குலசேகரம், காட்டாத்துறை, நெய்யூர், குளச்சல், கருங்கல், முட்டம், அருமனை, செறுவல்லூர், கடையாலுமூடு, களியக்காவிளை, கொல்லங்கோடு, குழித்துறை, லோயர் கோதையாறு, மார்த்தாண்டம், மூவாட்டுக்கோணம் , பைங்குளம், பத்துக்காணி, தேங்காய்ப்பட்டினம், திருவட்டாறு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் விதிகளுக்குள்பட்டு உரிய தள்ளுபடி பெற்றுக் கொண்டு, பாக்கி தொகையை தீர்வு செய்வதற்கும், தேவையானால் மறு இணைப்பு பெற்றுக்கொள்ளவும், மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சி, குழித்துறை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.22) காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடை பெற உள்ளது.
வாடிக்கையாளர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம். பாக்கித் தொகை தீர்வு செய்யப்படவில்லை என்றால் சட்டப் பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com