நாகர்கோவிலில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

நாகர்கோவிலில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
ராணித்தோட்டம் போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க பொதுச் செயலர் ஸ்டீபன் ஜெயக்குமார் தலைமை வகித்தார். சங்க கௌரவத் தலைவர் எம்.லட்சுமணன், துணைத் தலைவர் எப்.எஸ்.எ.லியோ ஆகியோர் பேசினர். 
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்; வருகைப்பதிவை குறைத்து வேலைப்பளுவை அதிகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும்; தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, விடுப்பு ஊதியம் உள்ளிட்ட நிலுவைகளை உடனே வழங்க வேண்டும்; தொழிலாளர் ஊதியத்தில் பிடித்தம் செய்த ரூ. 8 ஆயிரம் கோடியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 
தலைவர் சங்கர நாராயணபிள்ளை நன்றி கூறினார். இதில், நிர்வாகிகள் அருணாச்சலம், அசரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com