கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் எம். சுந்தரதாஸ் (71)வியாழக்கிழமை காலமானார்.
இவர் 1984, 1989, 1991ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.குழித்துறை பகுதியில் வசித்து வந்த இவர், குழித்துறை நீதிமன்றத்தில் வழக்குரைஞராகவும் பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சுந்தரதாஸ், வியாழக்கிழமை காலமானார்.
இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது உடல் நித்திரவிளை பகுதியில் உள்ள குடும்ப வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு, அங்குள்ள குடும்ப கல்லறைத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 22) காலை 10 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது.