குலசேகரம்  அருகே மோட்டார் சைக்கிள்  மோதி முதியவர் சாவு

குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தங்கையன் (74)  உயிரிழந்தார்.

குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தங்கையன் (74)  உயிரிழந்தார்.
திருநந்திக்கரை குளத்துவிளையைச் சேர்ந்தவர் தங்கையன்.  இவர் வியாழக்கிழமை அதிகாலையில் விவசாய கூலி வேலைக்காக திருநந்திக்கரை பகுதியில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக பேச்சிப்பாறைக்கு, மலைவிளையைச் சேர்ந்த ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் தங்கையன் மீது மோதியது இதில் பலத்த காயமுற்ற அவரை அப்பகுதியிலுள்ளவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு அவர் இரவில் உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com