கன்னியாகுமரி

தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி குமரியில் இருந்து சென்னைக்கு பிரசாரப் பயணம்

DIN

தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; தமிழ்வழிக் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பன்னாட்டு தமிழுறவு மன்றம் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரையிலான பிரசாரப் பயணம் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு வியாழக்கிழமை தொடங்கியது.
பன்னாட்டு தமிழுறவு மன்ற அமைப்பாளர் வ.மு.சேதுராமன் தலைமை வகித்தார். குமரி மாவட்டத் தலைவர் கோ. முத்துகருப்பன் முன்னிலை வகித்தார். இதில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன், வள்ளலார் பேரவைத் தலைவர் சுவாமி பத்மேந்திரா மற்றும் தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரியிலிருந்து பல்வேறு மாவட்டங்கள் வழியாகச் சென்று, மார்ச்  மாதம் 3ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது பிரசாரப் பயணம். அங்கு தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து மனு அளிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT