உதயகிரி கோட்டை கல்லறை தோட்டத்தில் அர்ச்சிப்பு விழா

தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் உள்ள உதயகிரிகோட்டையில் அமைந்துள்ள டச்சு தளபதி டிலனாய் குடும்பக் கல்லறை

தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் உள்ள உதயகிரிகோட்டையில் அமைந்துள்ள டச்சு தளபதி டிலனாய் குடும்பக் கல்லறை தோட்டத்தில் அர்ச்சிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
புலியூர்குறிச்சியில்  அமைந்துள்ள  மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை வீர மரண விழாவும், இவ் வரலாற்று நிகழ்வுடன்  டச்சு தளபதி  டிலனாய் குடும்பக் கல்லறை  அர்ச்சிப்பு விழாவும் சனிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் இரவு பனவிளை பங்கு தந்தை திருக்கொடியை ஏற்றி வைத்தார். 2 ஆம் நாளான ஞாயிற்றுகிழமை  முட்டைக்காடு பங்குதந்தை மனோகியம் சேவியர் தலைமையில்  திருப்பலி நடைபெற்றது.  திங்கள்கிழமை  மறைசாட்சி  தேவசகாயம்பிள்ளை ஆலய வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா மற்றும் ஆடம்பரக் கூட்டு திருப்பலியில் வைசிலின் சேவியர் மறையுரை ஆற்றினார். 
இதையடுத்து, ஆலயத்தின் அருகில் உதயகிரி கோட்டையில் அமைந்துள்ள வரலாற்று  நிகழ்வுடன் தொடர்புடைய  டச்சு தளபதி  டிலனாய் குடும்பக் கல்லறை தோட்டத்தில் அர்ச்சிப்பு விழா நடைபெற்றது. திருத்தல அதிபர் ஹிலாரி மந்திரித்து அர்ச்சித்தார். 
இந்நிகழ்வில் திருத்தல ஆன்மிக குரு மரியதாஸ்,  உழ நல வழிகாட்டி மரியதாசன், அருள்பணியாளர்கள் ஜெயக்குமார், மரியடேவிட், மார்டீன்,  கிறிஸ்துதாஸ், ஜெரால்டு,  சாமுவேல், சேகர்மைக்கேல்  அருள்சகோதரிகள், புலியூர்குறிச்சி பங்குபேரவை  துணைத்தலைவர் ஆல்பர்ட்ஜெஸ்டின்,  செயலர் ஜெனி,  பொருளாளர் பாபு,  துணைச்செயலர் கிறிஸ்டிபாய்,  நிர்வாகிகள் புரோடிவில்லர், வின்சென்ட்ராஜ், பல்வேறு பகுதியில் இருந்து இறைமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com