குமரி அருகே சாலை விபத்து:  மாணவர் உள்பட இருவர் சாவு

கன்னியாகுமரியை அடுத்த மயிலாடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

கன்னியாகுமரியை அடுத்த மயிலாடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரியை அடுத்த மயிலாடி மார்த்தாண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாய் ஹரிஹரன் (23). வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த அவர், தன் நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் முத்துராஜுடன் (20) ஞாயிற்றுக்கிழமை இரவு நாகர்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றாராம்.
மயிலாடி அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது, நாகர்கோவிலில் இருந்து பெருமணல் நோக்கி வந்த அரசுப் பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். முத்துராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த சாய்ஹரிஹரன் சுசீந்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
விபத்து குறித்து அஞ்சுகிராமம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com