நாகர்கோவிலில் கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
வசந்த் அன் கோ மற்றும் வசந்த் தொலைக்காட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகளுக்கான பேச்சு, பாடல், ஓவியப் போட்டி மற்றும் மாறுவேடம் உள்பட பல்வேறு போட்டிகள் நாகர்கோவில் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இப்போட்டியில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பின்னர், நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியை குளோரிபாய் பாக்யலீலா தலைமை வகித்தார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வசந்த் அன் கோ நிறுவனர் ஹெச். வசந்தகுமார் எம்.எல்.ஏ. விருதுகள் வழங்கிப் பாராட்டினார்.
இதில், காங்கிரஸ் கட்சியின் வர்த்தக அணி மாநிலச் செயலர் ஏ.எம்.டி.செல்லதுரை, குமரி முருகேசன், கிறிஸ்டி ரமணி, ஆரோக்கியராஜ், பால்துரை உள்பட கலந்துகொண்டனர்.