கொட்டாரம் வடக்குத் தெரு விஸ்வகர்மா சமுதாயத்துக்குள்பட்ட தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் 16ஆவது வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், கலச பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 9 மணிக்கு கும்பாபிஷேகம், அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அலங்கார தீபாராதனை, ஊட்டுப்படைப்பு ஆகியவை நடைபெற்றன. மாலை 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, பஜனை நடைபெற்றன.
ஏற்பாடுகளை தலைவர் ஆறுமுகம், கணக்காளர் மகாராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.