கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே மலைக் குன்றில் தீ விபத்து

DIN

திருவட்டாறு அருகே வேர்க்கிளம்பி அருகேயுள்ள மல்லன் பெற்றையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 
வேர்க்கிளம்பி அருகே மல்லன் பொற்றை என்ற குன்று உள்ளது. வருவாய்த்துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள இங்கு  ஏராளமான காட்டு மரங்கள் மற்றும் செடி, கொடிகள் காணப்படுகின்றன. தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது. 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தக்கலை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, தீயணைப்பு நிலைய அதிகாரி சுரேஷ் சந்திர காந்த் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பல மணி நேரம் போராடி   தீயை அணைத்தனர். 
எனினும் தீயினால் ஏராளமான சிறு மரங்கள், செடி கொடிகள் எரிந்து சாம்பலாகின.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT