நாகர்கோவில் அருகே ஆசிரியை, மாணவிகளுக்கு தொல்லை: கல்லூரி நிர்வாகி உள்பட 3 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே பாரா மெடிக்கல் கல்லூரியில் ஆசிரியைகள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே பாரா மெடிக்கல் கல்லூரியில் ஆசிரியைகள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி நிறுவனர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில் அருகேயுள்ள இறச்சகுளத்தில் பாரா மெடிக்கல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு,  80 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  ஆசிரியர்கள் உள்பட 10 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.  இந்நிலையில், கல்லூரியின் நிறுவனர் ரவி (35)  ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதற்கு பெண் ஊழியர்கள் இருவர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சில தினங்களுக்கு முன்பு ஒரு ஆசிரியையின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், பூதப்பாண்டி உதவி காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான போலீஸார் விசாரித்தனர். இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் நிர்வாகி ரவி,  கல்லூரியின் இணை இயக்குநர்கள் நளினி (30), கலா (28) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.  
கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியில், கேமராக்கள் பொருத்தி அதன்மூலம் மாணவிகளை ரகசியமாக கண்காணித்து வந்ததாகவும் கைதான ரவி மீது குற்றச்சாட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com