பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில், அண்மையில் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற இப்பள்ளி மாணவர், மாணவிகள் செல்வ அஜய், அனிஷ், விக்னேஸ்வரன், சசிகுமார், சிவசுந்தரி, பார்வதி, ஸ்வீட்டி, குருஜோதி ஆகியோருக்கு, அமைச்சர் பி.எம்.ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் பரிசு வழங்கினர்.
மேலும், பரிசு பெற்ற மாணவர், மாணவிகளை பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.