தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தின்போது அரசு ஊழியர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான அரசாணை எண் 56-ன் நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வீ. பார்த்தசாரதி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலர் துரைசிங்கம் பேசினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் சுப்பு, பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் கங்காதரன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் சண்முக சுந்தரம், வணிகவரி பணியாளர் சங்க மாநிலச் செயலர் கற்பகம், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ரெஜினா, மாவட்டத் தலைவர் தேவி, தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு மாநிலச் செயலர் ஸ்டான்லி, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாநிலச் செயலர் அல்லா பிச்சை உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்