சுத்தமல்லியில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை சார்பில், சுத்தமல்லி தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அஷ்ரப் அலி தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி சண்முக சுந்தரம் முன்னிலை வகித்தார். சித்த மருத்துவர் உமா ஜானகி வேலாயுதம் நிலவேம்புக் குடிநீரை மாணவர்-மாணவிகளுக்கு வழங்கினார். கொசு உற்பத்தியைத் தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், கைகழுவும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், முத்துக்குமார், முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.