சிவகிரியில் டிராக்டர் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகிரி அருகேயுள்ள குமாரபுரம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சந்தனப்பாண்டியன் மகன் மீனாட்சிசுந்தரம் (18). ராஜபாளையம் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முருகன் என்பவரது டிராக்டரில் சிலருடன் சேர்ந்து பேயன் ஆற்றுப் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, டிராக்டர் கவிழ்ந்ததில் மீனாட்சிசுந்தரம் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, சிவகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.