உவரி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் திடீரென மயங்கி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
உவரி பீச் காலனியை சேர்ந்த மோகன்தாஸ் மகன் சிரில் (55). இவர், செவ்வாய்க்கிழமை மாலையில் நாட்டு படகில் சக மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு படகிலேயே மயங்கி விழுந்தாராம். சக மீனவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வரும்வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, கூடங்குளம் கடலோர காவல் படையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.