திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
வண்ணார்பேட்டையைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், செவ்வாய்க்கிழமை இரவு வியாபாரம் முடிந்து கடையைப் பூட்டிச் சென்றாராம். புதன்கிழமை காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். கடையில் இருந்த 40 அரிசி மூட்டைகள், எண்ணெய் டின்கள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்களை மர்மநபர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்ததும் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.