ஆசிரியர் கூட்டணியின் புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பாளையங்கோட்டை வட்டார கிளை புதிய

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பாளையங்கோட்டை வட்டார கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், தேர்தல் ஆணையாளராக மாவட்ட துணைச் செயலர் அந்தோணிசாமி மற்றும் துணைத் தேர்தல் அலுவலராக சேரன்மகாதேவி வட்டார பொருளாளர் அமுதா ஆகியோர் செயல்பட்டனர். தலைவராக ஆனி அன்ன பாக்கிய மணி, துணைத் தலைவர்களாக ஜான்பெனடிக்ட் ஜெயராஜ், வசந்தி, வனப்பார்வதி, வட்டாரச் செயலராக தேவேந்திரன், துணைச் செயலராக சார்லஸ், சாந்தி, வேணி, பொருளாளராக அருள்பாண்டியன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக நளினி, ஆரோக்கிய செல்வி, தங்கதுரை ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டத் தலைவர் பி.ராஜ்குமார், மாவட்டச் செயலர் செ.பால்ராஜ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com