தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், கள விழிப்புணர்வு அலுவலகம், திருநெல்வேலி மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கள விளம்பர உதவி அலுவலர் போஸ்வெல்ஆசீர் வரவேற்றார். மாநகர நல அலுவலர் சதீஷ்குமார் சிறப்புரையாற்றினார். தூய்மை இந்தியா திட்டத்தின் சிறப்பம்சங்கள், மக்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கிடைக்கும் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகளின் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் கவிதா, சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.