திருநெல்வேலி மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (செப்.20) நடைபெறுகிறது.
இது தொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர், எரிவாயு நுகர்வோர்கள் கலந்துகொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகிற வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்கள் கலந்துகொண்டு எரிவாயு உருளை பதிவு செய்வதில் மெத்தனப்போக்கு, முறைகேடுகள், எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம், முறைகேடுகள் குறித்த குறைகளை தெரிவிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.