நெல்லையில் இரு இடங்களில்  ரயிலில் அடிபட்டு இருவர் சாவு

பாளையங்கோட்டையில் ரயிலில் அடிபட்டு 60 வயது பெண் உள்பட இருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.

பாளையங்கோட்டையில் ரயிலில் அடிபட்டு 60 வயது பெண் உள்பட இருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியைச் சேர்ந்தவர் மூக்கம்மாள் (60). இவர், செவ்வாய்க்கிழமை காலை ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டதில் தலை துண்டிக்கப்பட்டு அந்த இடத்திலேயே இறந்தார். 
மற்றொருவர் சாவு: பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கேட் அருகே சுமார் 50 வயதுடைய ஆண் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. திருநெல்வேலி ரயில்வே காவல் ஆய்வாளர் அருள்ஜெயபால், உதவி ஆய்வாளர் ஜூலியட் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com