பாளையங்கோட்டையில் இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்லிபியபோது தீப்லிபிலிடித்து பலத்த லிகாலியலிமலிடைந்த இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
பாளையங்கோட்டை ஆயுதப் படை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்லிகுமார் மகன் ஆல்வின்(19). இவர், கடந்த 13ஆம் தேதி பாளையங்கோட்டையில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்லிபிலியுள்ளார். அப்போது பெட்ரோல் இரு சக்கர வாகனத்தின் என்ஜின் மீது சிறிது சிந்தியதாம்.
இந்நிலையில் பெட்ரோலை நிரப்பிய பிறகு ஆல்வின் இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தபோது, இரு சக்கர வாகனம் தீப்பிடித்துள்ளது. வேகமாக பரவிய தீயில் ஆல்வின் பலத்த காயமடைந்த நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.