சிவந்திப்பட்டி அருகே தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.
சிவந்திப்பட்டி அருகேயுள்ள தெற்குவெட்டியப்பந்தியைச் சேர்ந்த முண்டசாமி மனைவி சோமாலை (30). இவர், தீக்காயமடைந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.