பாளையங்கோட்டை துணை மின்நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் இம்மாதம் 24ஆம் தேதி முதல் 14 நாள்களுக்கு மின்தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பையன் கிருஷ்ணராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாளையங்கோட்டை துணை மின் நிலையத்திற்கு மின்னூட்டம் செய்யும் 110 கிலோ மின் வழிப்பாதையில் இம்மாதம் 24ஆம் தேதி முதல் அக். 7ஆம் தேதி வரை அவசர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கு தகுந்தாற்போல் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் மேற்கண்ட நாள்களில் தவிர்க்க முடியாத காரணங்கள் அல்லது எதிர்பாராமல் மின் தடங்கல்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆகவே, மின்வாரியப் பணிகளுக்கு பொதுமக்கள், தொழில், வணிக மற்றும் கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.