மேலப்பாளையத்தில் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
மேலப்பாளையம் அக்பர் தெருவைச் சேர்ந்தவர் அப்பாஸ். இவருடைய மனைவி மைதீன் பாத் (82). கடந்த 14-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த ஒருவர், அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாராம். இதுகுறித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த, அவரது உறவினருமான பாதுஷாவை (44) கைது செய்து, அவரிடமிருந்து 5.5 பவுன் நகையை மீட்டனர்.