திருநெல்வேலி

நெல்லையில் புத்தகத் திருவிழா தொடக்கம்

DIN

பாளையங்கோட்டையில் புத்தகத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. இத்திருவிழா அக். 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா பாளையங்கோட்டையில் முருகன்குறிச்சி செல்வி மஹாலில் சனிக்கிழமை (செப்.22) முதல் வரும் அக். 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்துப் பேசினார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் ஷே. சந்தோஷ்பாபு முதல் விற்பனையை தொடங்கிவைத்தார். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் மு. முகம்மது சாதிக் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் ச. மகாதேவன், எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன், கவிஞர் பே. ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். அமைப்பின் நிறுவனர் வீரபாலன் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் கவிஞர் அ. மதியழகன் நன்றி கூறினார்.
தினமும் மாலை 5 மணிக்கு கதை சொல்லுதல், தமிழ் அறிஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி

திருப்பூா் தொகுதியில் 15 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT