பாளையங்கோட்டையில் புத்தகத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. இத்திருவிழா அக். 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா பாளையங்கோட்டையில் முருகன்குறிச்சி செல்வி மஹாலில் சனிக்கிழமை (செப்.22) முதல் வரும் அக். 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்துப் பேசினார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் ஷே. சந்தோஷ்பாபு முதல் விற்பனையை தொடங்கிவைத்தார். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் மு. முகம்மது சாதிக் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் ச. மகாதேவன், எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன், கவிஞர் பே. ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். அமைப்பின் நிறுவனர் வீரபாலன் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் கவிஞர் அ. மதியழகன் நன்றி கூறினார்.
தினமும் மாலை 5 மணிக்கு கதை சொல்லுதல், தமிழ் அறிஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.