திருநெல்வேலியில் மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்பட இயக்குநர், கலைஞர்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அவ்வை நுண் கலைக் கல்லூரி, அறிவன் தேயம் சார்பில் அத் திரைப்படம் குறித்த கருத்து, கலந்துரையாடல், பாராட்டு விழாவுக்கு சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் தலைமை வகித்து பேசினார். நிகழ்ச்சியில், உலகத் தமிழ் ஆராய்ச்சி மருத்துவக் கழகத் தலைவர் டாக்டர் மைக்கேல்ஜெயராஜ், ஓவியர் சந்துரு, வரலாற்று ஆய்வாளர் செ. திவான், கவிஞர் கிருஷி, உதவிப் பேராசிரியை தி. முத்துலட்சுமி, ஓவியர் கதிர் உள்பட பலர் வாழ்த்திப் பேசினர். திரைப்படத்தின் இயக்குநர் லெனின்பாரதி ஏற்புரை ஆற்றினார். ஒருங்கிணைப்பாளர் பா. செந்தமிழன் நன்றி கூறினார்.