மேலப்பாளையத்தில் ரிபாயி தைக்காவில் ரிபாயி நாயகம் பிறந்த 928 ஆவது கந்தூரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
ரிபாயி தைக்காவில் ஆண்டுதோறும் முஹ்ரம் பிறையில் கந்தூரி விழா நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நேமித கொடி, சந்தனம் குடம் தர்காவுக்கு கொண்டு வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து வெள்ளை கலிபா தெருவிலுள்ள தைக்காவில் இரவு 9 முதல் அதிகாலை 4 மணி வரை இறைவணக்க நிகழ்ச்சி, திக்ரு மஜ்லிஸ், வஸீலா தமிழ் பைத்துகள் ஆகியன நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு, தென்னிந்திய ரிபாயி தைக்காவின் தலைவர் எஸ். முகம்மதுபுஹாரி தலைமை வகிக்கிறார்.