மேலப்பாளையத்தில் இன்று ரிபாயி தர்கா கந்தூரி

மேலப்பாளையத்தில் ரிபாயி தைக்காவில் ரிபாயி நாயகம் பிறந்த 928 ஆவது கந்தூரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.


மேலப்பாளையத்தில் ரிபாயி தைக்காவில் ரிபாயி நாயகம் பிறந்த 928 ஆவது கந்தூரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
ரிபாயி தைக்காவில் ஆண்டுதோறும் முஹ்ரம் பிறையில் கந்தூரி விழா நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நேமித கொடி, சந்தனம் குடம் தர்காவுக்கு கொண்டு வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து வெள்ளை கலிபா தெருவிலுள்ள தைக்காவில் இரவு 9 முதல் அதிகாலை 4 மணி வரை இறைவணக்க நிகழ்ச்சி, திக்ரு மஜ்லிஸ், வஸீலா தமிழ் பைத்துகள் ஆகியன நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு, தென்னிந்திய ரிபாயி தைக்காவின் தலைவர் எஸ். முகம்மதுபுஹாரி தலைமை வகிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com