பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி கைலாசபுரம் தாமிரவருணி நதியில் திங்கள்கிழமை ஆரத்தி பூஜை நடைபெற்றது.
ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் குழு, ஸ்ரீகைலாசநாத சுவாமி, ஸ்ரீ சௌந்தரவல்லி அம்பாள் திருக்கோயில் பக்தர் பேரவை ஆகியவற்றின் சார்பில் அபிஷேகம், தீப ஆரத்தி பூஜை ஆகியவை நடைபெற்றன. இதில், அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் குணதுரை, பக்தர் பேரவையின் அமைப்பாளர் ஆனையப்பன், சக்ஷம் அமைப்பின் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன், பாஜக மாவட்டத் தலைவர் அ. தயாசங்கர், மாநில இளைஞரணிச் செயலர் வேல். ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.